17:49 | Author: சாகம்பரி

இப்போது மனோசக்தியை வலிமை செய்யும் எளிமையான வழிமுறையை பார்க்கலாம்.
கொஞ்சம் பாஸிடிவ் எண்ணங்களை மனதில் பதிந்து கொண்டால் நமக்குத் தேவையானதை அடையும் மனஉறுதி நம்மிடம் இருக்கும். வயிற்று பகுதி பயிற்சி எளிதில் உணர்ச்சி வசப்படுவதை தடுக்கும். இதனால் எதிர்காலத்தில் நாம் அவசரப்பட்டு தவறுகளை செய்ய மாட்டோம். மூளைக்கு செலுத்தப்படும் இரத்தம் சிந்திக்கும் திறனை அதிகரிக்கும். இதனால்  நல்ல விசயங்கள் பதியப்படும். நம்மைபற்றிய ஹை-எஸ்டீம் (உயர்வான இமேஜ்) நம்முள் உருவாக்கப்படும். இதயத்தின் சுவாசம் மனஉறுதியை அதிகரிக்கும். அதில் தூய்மையான எண்ணங்கள் கலக்கும்போது மனோசக்தி அதிகரிக்கும். அன்-ஷேக்கபல் என்று சொல்வார்களே அதுபோன்ற தளராத மனம் கிடைக்கும்.
இத்தனை ப்ராஸஸ்களும் செய்வது ஒன்றைத்தான். எதிர்மறை எண்ணங்களை அகற்றி நேர்மறை எண்ணங்களை பதிய வைப்பது. இந்த எண்ணங்கள்தான் நமக்கு தேவையான மனோசக்தியை தரும். உடலுக்கு சக்தி தரும் ஊட்டசத்துக்கள்போல, இந்த ஹை-எஸ்டீம் நம் மனதிற்கு  நாம் தரும் விட்டமின் ஆகும். நாம் ஒரு பிரச்சினையை கவனப்படுத்தவும், தீர்வுகளை தேடித்தரவும், செய்யும் செயல்கள் வெற்றியடையவும் இது உதவும். (இது ரொம்பவும் அடிப்படையான பாடம்தான். இதை வைத்து ஹெலிகாப்டரை பறக்க விடுவது, நோக்கு வர்மம் செய்வது என்பதெல்லாம் முடியாது.)
செய்யும் செயல்கள் வெற்றியடைய தளராத முயற்சி வேண்டும். வழிகளை தேடிக் கொண்டே இருக்க வேண்டும். இது நம்முடைய மனதினை பொருத்ததுதான். நான் நல்லதுதானே நினைக்கின்றேன்… நான் எந்த தவறும் செய்யவில்லையே… நியாயமாக எனக்கு வேண்டியதை பெற விழைகிறேன்… கண்டிப்பாக இதற்கு ஒரு வழி இருக்கும். என்ற உறுதியை தந்து தேடலின் பாதையில் பயணிக்க வைக்கும். இதற்குதான் நம்மை பற்றிய ஹை-எஸ்டீம் நம் மனதிற்கு இருக்க வேண்டும் என்று சொன்னேன்.
இப்போது விசயத்திற்கு வரலாமா? இத்தனை பயிற்சி எடுத்துதான் மனோசக்தியை செயல்பட வைக்க முடியும் என்றில்லை. எளிதான வழிதான். நம்மை பற்றி ஹை-எஸ்டீமை நம் மனதிற்குள் பதிய வைக்க வேண்டும்.        
இதனை ரிவர்ஸ் பார்முலா என்று சொல்லலாம். நம்ம மனசு ரொம்ப சுத்தம் என்ற வார்த்தையை பதிய வைக்க மூச்சு பயிற்சிதான் அவசியம் என்று இல்லை.  நம்மை பற்றிய  பாஸிட்டிவ்  இமேஜை மனதிற்குள் உருவாக்க நல்ல விசயங்களை பதிய வைக்க வேண்டும். நம்மை நாமே சபாஷ் என்று சொல்லி பாராட்டும் செயல்களை செய்ய வேண்டும்.
பரிட்சையில் முதலிடம் வருவது, ஹெச்ஆரிடம் நல்ல ரிமார்க் வாங்குவது… பாங்க் பாலண்ஸ் வைத்திருப்பது, சொந்தமாக வீடு வைத்திருப்பது, ம்… அழகான படித்த மனைவி… இதெல்லாம் சபாஷ் போட வைக்காது. மனிதாபிமானம் மிக்க செயல்கள் செய்யும்போது நம் மனம் நம்மை வாழ்த்தும். பாஸிட்டீவ் நோட்ஸ் எடுத்து வைத்துக் கொள்ளும்
பரிட்சையில் தோல்வியுற்றாலும் தளர்வடைய வைக்காமல் அடுத்து என்ன செய்யலாம் என்று யோசிக்க வைக்கும். வேலைபறி போனாலும் நம்மை பொறுப்புடன் சிந்திக்க வைத்து வருமானத்திற்கான வழியை தேட வைக்கும். குடும்பத்தினருடன் சண்டையிட வைத்து நம்மை பிரித்து வைக்காது.
மனிதாபிமானம் மிக்க செயல்கள் என்ன செய்யலாம்?
Caring and nurturing இதுதான் மனிதாபிமானத்தின் அடிப்படையாகும். இதுதான் நம்மைபற்றிய ஹை-எஸ்டீமை நமக்குள் பதிய வைக்கும்.  இதை செய்யுங்கள் அதை செய்யுங்கள் என்று நான் சொல்வதைவிட நீங்களே ஒரு லிஸ்ட் தயார் செய்யுங்களேன். அன்னதானம் செய்வது… இறைவனுக்கு பூஜை… அநாதை இல்லைத்திற்கு நன்கொடை… கும்பலாக சேர்ந்து கொண்டு தண்ணீர் பந்தல் வைப்பது… இதெல்லாம் இல்லை. இவையெல்லாம் வேல்யு கூட்டுவது மட்டுமே. தவிர இவற்றை எப்போதாவதுதான் செய்வோம்.
ஒரு நாளைக்கு ஒரு முறையேனும்   நம் ஆழ்மனம் நம்மை பாராட்டிக் கொள்ளும் செயல்களை செய்ய வேண்டும். சின்ன சின்ன செயல்கள்… உங்கள் பார்வையிலேயே படும்…
மனிதாபிமானம்… மனித அபிமானம்… சகமனிதர்களை   நேசிப்பது மட்டும் அல்ல. நம்மை நாமே மனிதனாக உணர்வது. இதுதான் மிக உயர்வானது. இந்த நிலையை சில செயல்கள் மட்டுமே பெற்று தரும்.  உதாரணமாக,
பேருந்தில் பயணிக்கிறோம். ஒரு வயதான பெரியவர் அமர இடம் கிடைக்காமல் நின்று கொண்டே வருகிறார். தடுமாறியபடி அவர் நிற்கும்போது மனம் பதைக்கிறது (மனம் பதைத்தால் நல்லது… உங்களுக்குள் ஒரு நல்ல மனம் இருக்கிறது என்று பொருள்). நாமும் நின்று கொண்டே செல்வதால் அவர்க்கு உதவ முடியாத நிலை. அந்த சமயத்தில்  யாராவது இருக்கையை விட்டு எழுந்து நின்று அவருக்கு இடம் தந்தால்… நமக்குள் ஒரு நிம்மதி வரும் பாருங்கள்… அதை குறித்து வைத்துக் கொள்ளுங்கள். இதுதான் லிஸ்டில் இடம் பெற வேண்டும்.
எந்த செயலை செய்தால் இரவு உறங்கும்முன் நினைவிற்கு வந்து நிம்மதியை தருகிறதோ… போற்றத்தக்க நல்ல செயல்களை செய்வது மட்டுமல்ல…  தவறு என்று மனம் நினைக்கும் செயல்களை செய்யாமல் இருப்பதுகூட நல்லதுதான். அது எல்லாமே ஹை-எஸ்டீம் லிஸ்ட்தான். எப்படி உடலுக்கு ஊட்ட சத்து மிக்க உணவுகள் தேவையோ அதுபோல, இதுதான் மனதிற்கு நாம் தரும் உணவு. நட்ட விதை முளைத்து பூவும் பிஞ்சுமாக பூத்துக் குலுங்கும்போது, மனதிற்குள் இருக்கும் குப்பைகள் நாளடைவில் மக்கிப் போய்விடும்.
ஒரு இக்கட்டில் நாம் மாட்டும்போது ‘மாட்டிகிட்டாயா?’ என்று எக்காளமிட்டு குத்தி காட்டி நம்மை சாய்க்கும் வேலையை செய்யாது. ஒரு தவறும் நாம் செய்யவில்லை… இதுவும் கடந்து போகும் என்று தேற்றும். வழிகள் சொல்லி தரும். வெற்றி பெறுவோம் அழுத்தமாக எண்ண வைக்கும்.
எளிதாக சொல்லப் போனால்  நிறைய நல்ல விசயங்களை செய்யுங்கள், அது  நேர்மறை ஆற்றலை உங்கள் மனதிற்கு தரும். எதிர்மறை எண்ணங்கள் குறைந்து போகும்.

இதுதான் அந்த காலத்து ரகசியம். இலகுவாக இருக்கும் மனம் சக்தி மிக்கதாக இருக்கும்!. அடுத்த நொடி என்ன நடக்கப் போகிறதோ என்ற கவலையை எப்போதும் மனதிற்குள் கிளப்பும் இந்த காலகட்டத்தில் மனதை தொலைத்து விட்டு சிறிய விசயங்களைக்கூட சிக்கலாக்கி கொள்வோம்.  தேற்றுவாரும் போற்றுவாரும் இல்லை என்ற நிலையிலும் மனோசக்தி நமக்கு உதவும்.  சரியாக இதனை பயன்படுத்தி நம் வாழ்க்கையை கை கொள்ளுவோம்.!
நன்றி  
(முற்றும்)
Category: | Leave a comment
17:37 | Author: சாகம்பரி

மனதை கைகொள்ளுவதும்… மனோசக்தியை நமக்கானதாக உருவாக்குவதும் எப்படி? உண்மை என்னவெனில் நம் அனைவரிடமும் மனோசக்தி இருக்கிறது. ஒரு பொக்கிஷம்போல்… ஆனால் தூசு படிந்து இருக்கிறது. அதை தூய்மைபடுத்தி விட்டால் இந்த சக்தி நமக்கு பயன்படும்.

மனோசக்தியை ஆக்டிவேட் செய்யத் தேவையானதாக சொல்லப்படுவது மூச்சு பயிற்சி.  ஆழ்ந்த மூச்சை இழுத்து விடும்போது நமக்குள் என்ன நடக்கிறது?

உடலின் உள்ளுறுப்புகளுக்கு இரத்தம் பாய்ச்சப்படுகிறது. ஆக்ஸிஜன் சக்தி செலுத்தப்படுகிறது. அட, சுவாசித்தல் என்பது நுரையீரல் மட்டும் தொடர்புடைய விசயம் அல்லவா? ஆனால், உள்ளுறுப்புகள் எவ்வளவோ இருக்கின்றனவே… அதையெல்லாம் மூச்சுப்பயிற்சி ஆக்டிவேட் செய்யுமா என்று கேட்க தோன்றும்.

செய்யும் என்பதுதான் உண்மை. மூச்சை இழுத்து விடும்போது வயிற்று பகுதிக்கு இரத்த சுழற்சி ஏற்படும்… இதயத்திற்கு இரத்தம் செலுத்தப்படும்… மூளைக்கு இரத்தம் செலுத்தப்படும். அந்தந்த இடத்தில் கவனம் வைக்கும்போது நாம் உணர முடியும்.

பிரணயாமம் செய்யும்போது மூக்கில் ஏற்படும் காற்றின் சுழற்சி மூளைக்கு இரத்தம் செல்லுவதை உணர வைக்கும்.  நெற்றி பொட்டில் உள்ள இரத்த நாளங்கள் விரிவடையும்.

மார்புகூடு விரிவடையும் வண்ணம் ஆழ்ந்த மூச்சை  இழுக்கும் போது இருதயத்திற்கு இரத்தம் செல்கிறது.

அதேபோல வயிற்றில் கையை வைத்துக் கொண்டு மூச்சை இழுத்து வெளியிடும்போது வயிற்று பகுதிக்குள் குளுமை பரவுவதை உணர முடியும்.

இவைதான் நான் முதலில் தெரிவித்திருந்த மனோசக்தியை ஆளுமை செய்யும் மையங்கள்! இவைதான் மனோசக்தியை அதிகரிக்கச் செய்யும்.
இன்னும் தெளிவாக புரிந்து கொள்ள நான் சொல்வதை முயற்சித்து பாருங்கள். மந்திரமாக நினைத்து சொன்னாலும் சரி… அழுத்தமான வார்த்தைகளாக சொல்லிப் பார்த்தாலும் சரி.

ஓம் என்று அழுத்தமாக உச்சரியுங்கள்… நெற்றிபொட்டில் மாற்றம் தெரியும். இது மூளைக்கான ஆக்டிவிட்டி!  நமசிவாய என்று சொல்லிப் பாருங்கள்  நெஞ்சுகூடு விரியும். வயிற்றில் கை வைத்துக் கொண்டு சம்போ என்று சொல்லிப்பாருங்கள் ‘ச’ உள்ளிழுக்கப்படும் காற்று ‘போ’ உச்சரிக்கும்போது வாய் வழியாக வெளியேறும். அது வெப்பமான காற்றாக இருக்கும்.

என்ன மந்திர பயிற்சி சொல்லித் தருகிறீர்களா என்று கேட்க வேண்டாம். வார்த்தைகள்தானே மந்திரம். இந்த உச்சரிப்புகள் தரும் அதிர்வுகளை எத்தனையோ வார்த்தைகள் செய்கின்றன. அவற்றில் சில மந்திரங்களாக இருக்கின்றன அவ்வளவுதான்.

சரி, இப்போது நாம் ஒரு விசயத்தை கூர்ந்து கவனிக்க வேண்டும். மூளை இருக்கும் தலைபகுதி, இதயம் இருக்கும் மார்பு பகுதி, வயிற்று பகுதி இவற்றில் ஏற்படும் மாறுதல்கள்தான் மனதை பாதிக்கின்றன. சரி, மூச்சு பயிற்சியின் மூலம்… நம்மால் இந்த பகுதிகளை தனித்தனியே ஆக்டிவேட் செய்ய முடியும் என்பது புரிகிறது அல்லவா?

மேலோட்டமான உணர்வுகளுக்கு வயிற்று பகுதி… திட்டமிடுதல்,  நினைவுகளை கையாளுதல் இவற்றிற்கு மூளை பகுதி… உறுதியான எண்ணங்களுக்கு இதயப்பகுதி என்று பிரிந்து செயல்படுகிறது.
இப்போது நாம் மூச்சு பயிற்சியை தொடங்குவோமா? முதலில் கையை வயிற்றில் வைத்து சம்போ என்று உச்சரித்து இரத்த ஓட்டத்தை  வயிற்று தசைக்கு மாற்றுங்கள். வாய் வழியே குளிர்ந்த காற்று உள்ளே செல்லும். சூடான காற்று வாய் வழியே வெளியேறும். வயிற்றின் வெப்பம் குறையும். இதை நீங்கள் எளிதாக செய்ய முடியும். பத்து நிமிடங்கள் இதை செய்த பின் கொஞ்சம் ரிலாக்ஸ்டாக இருக்கும். டென்சன் குறைந்திருக்கும். சந்தேகம், பய உணர்வுகள் இருக்காது. கவலைகள் குறைந்து இயல்பாக சிரிக்கவும் முடியும்.

அடுத்து கண்களை மூடிக் கொண்டு மூக்கின் வழியே சுவாசித்து பாருங்கள். மூளைக்கு இரத்த ஓட்டம் பாயும் பயிற்சி.  புருவங்களுக்கு மத்தியில் கவனம் வையுங்கள். ஒரு நிமிடம்கூட தொடர்ந்து இதை செய்ய முடியாது. ஏனெனில்  இதை செய்யும்போது நமக்குள் இருக்கும் நினைவுகள் தூண்டப்படும். நம்மைபற்றிய நல்லது கெட்டது எல்லாம் நினைவிற்கு வரும். மனம் அமைதியாக இருக்காது. சுவாசிப்பதில் இருந்து கவனம் சிதறிவிடும். ஆரம்பத்தில் கொஞ்சம் சிக்கல்தான்! 

உண்மையில் நாம் எதை அடைய விரும்புகிறோமோ அதை இங்கேதான் நினைத்து பார்க்க வேண்டும். ஆனால் தொடர்ந்து முயற்சித்தால், நம்முடைய எண்ணம் பலிதமாக தேவையான செயல்பாட்டு முறைகள் வடிவு பெறும் .உதாரணமாக, நமக்கு ஒரு வேலை தேவை… அதற்கான அடிப்படை தகுதிகள் நம்மிடம் என்ன இருக்கிறது என்ன இல்லை… தகுதிகள் இருந்தும் வேறு ஏதும் தடை உள்ளதா… அட்டிட்யூட் பிராப்ளம் போன்றவை… இதையெல்லாம் நம்மால் ஆய்வு செய்ய முடியும்.  நம்மை நாம் அறியும் இடமும்  நேரமும் இதுதான்!

அடுத்து இதயப்பகுதி சுவாசத்தை கவனியுங்கள். இதுதான் மனோசக்தியை வெளிக்கொணரும் முக்கியமான இடம்.  நெஞ்சில் கைவைத்துக் கொண்டு நீங்கள் கண்ணைமூடி சுவாசிக்கும்போது பழைய சம்பவங்கள், வெற்றி தோல்விகள், கடந்த காலத்தில் செய்த தவறுகள், ஒரு காலத்தில் நம்மிடம் இருந்த போற்றத் தக்க குணங்கள், கொள்கைகள், இனிமையான உறவுகளின் நினைவுகள் அடிமனதிலிருந்து வெளிக் கொணரப்படும்.இதுவரை இழந்தது பெற்றது அத்தனையும் நினைவிற்கு வரும். இங்கேயும் மூச்சை கவனிப்பதை விட்டுவிடுவோம். 

அடிமனதிலிருந்து எழும் நினைவுகளால் கண்களில் கண்ணீர் துளிர்க்கும். அது தவறுகளை கரைக்கும் விதமாகவும் இருக்கும். நம்மைபற்றிய பெருமிதத்தை வெளிப்படுத்தும் கண்ணீராகவும் இருக்கும். நமக்கு முன் யாரோ இருப்பதை போன்ற ஒரு தோற்றத்தை உருவாக்கிக் கொண்டால் கொஞ்சம் புலம்பவும் செய்யலாம். இந்த உணர்வு  நம்மை தேற்றும்.

இதெல்லாம் ஆரம்ப கட்டம்தான். இந்த விசயத்தை செய்ய செய்ய, நம்மை நன்றாக புரிந்து கொண்டு விடுவோம். நமக்கு முன் அமர்ந்து இருக்கும் நீதிபதி நம் குறைகளை கேட்க ஆரம்பித்து விடுவார், அதற்கான நியாயத்தையும் தருவார். அந்த நீதிபதிதான் நம்முடைய ஆழ்மனம். அடிமனதில் இருக்கும் தங்கியிருந்த எதிர்மறை எண்ணங்கள் வெளியேறி விடும். ஆழ்மனம் தெளிவாக இருக்கும். குற்றமற்ற நெஞ்சம்தான் மனோசக்தியின் அடிப்படை தேவையாகும்.
மற்றவை அடுத்த வரும் கடைசி பகுதியில்.


Category: | Leave a comment
13:28 | Author: Ravi
மருத்துவமனையின் நாற்காலிகள்
அழுகையையோ சிரிப்பையோ
தன்னுள் ஒளித்து வைத்திருக்கும்!
காத்திருக்கும் அவதிகளை…
பயணிகளின் இருக்கைகளும்
பாடங்களை பள்ளிக்கூட
இருக்கைகளும் பதிந்திருக்கும்
மயானத்து இருக்கைகள்
பழைய கதைகளை சொல்லும்
வாசலோரத்து இருக்கைகள்
வந்துபோன கதையினை சொல்லும்.
அழுகையோ அவதியோ
பாடமோ பழையகதையோ
இவை அத்தனையும் பதித்து
காத்திருத்தல்களின் சாயல்களை
ரகசியமாக மறைத்திருக்கும்
பூங்காவின் தனித்த இருக்கைகள்
Category: | Leave a comment